Kural 154 details

அறத்துப்பால்இல்லறவியல்பொறையுடைமை

Virtueஇல்லறவியல்பொறையுடைமை

Back to search

Verse

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.
Niraiyutaimai Neengaamai Ventin Poraiyutaimai Potri Yozhukap Patum

பொருள் (Tamil)

பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்

Explanation (English)

Seek'st thou honour never tarnished to retain; So must thou patience, guarding evermore, maintain

Athigaram

பொறை உடைமை

Section / Chapter

Section: 16.4

Chapter: அறத்துப்பால்

Kalaingar_Urai

பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.

Parimezhalagar_Urai

நிறை உடைமை நீங்காமை வேண்டின்-ஒருவன் சால்புடைமை தன்கண் நின்று நீங்காமை வேண்டுவானாயின்; பொறை உடைமை போற்றி ஒழுக்கப்படும்-அவனால் பொறை உடைமை தன்கண் அழியாமல் காத்து ஒழுகப்படும். (பொறை உடையானுக்கு அல்லது சால்பு இல்லை என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும் பொறை உடைமையது சிறப்புக் கூறப்பட்டது.)

M_Varadharajanar Urai

நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.

Solomon_Pappaiya Urai

சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்