Kural 147 details
அறத்துப்பால் • இல்லறவியல் • பிறனில் விழையாமை
Virtue • இல்லறவியல் • பிறனில் விழையாமை
Verse
பெண்மை நயவா தவன்.
பொருள் (Tamil)
பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்
Explanation (English)
Who sees the wife, another's own, with no desiring eye In sure domestic bliss he dwelleth ever virtuously
Athigaram
பிறன் இல் விழையாமை
Section / Chapter
Section: 15.7
Chapter: அறத்துப்பால்
Kalaingar_Urai
பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்.
Parimezhalagar_Urai
அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் - அறனாகிய இயல்போடு கூடி இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான், பிறன் இயலாள் பெண்மை நயவாதவன் - பிறனுக்கு உரிமை பூண்டு அவனுடைய இயல்பின்கண்ணே நிற்பாளது பெண் தன்மையை விரும்பாதவன். (ஆன் உருபு ஈண்டு உடன் நிகழ்ச்சிக்கண் வந்தது. இல்லறஞ் செய்வான் எனப்படுவான் அவனே என்பதாம்.)
M_Varadharajanar Urai
அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே
Solomon_Pappaiya Urai
அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்