Kural 145 details

அறத்துப்பால்இல்லறவியல்பிறனில் விழையாமை

Virtueஇல்லறவியல்பிறனில் விழையாமை

Back to search

Verse

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
Elidhena Illirappaan Eydhumenj Gnaandrum Viliyaadhu Nirkum Pazhi

பொருள் (Tamil)

எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்

Explanation (English)

'Mere triflel' saying thus, invades the home, so he ensures A gain of guilt that deathless aye endures

Athigaram

பிறன் இல் விழையாமை

Section / Chapter

Section: 15.5

Chapter: அறத்துப்பால்

Kalaingar_Urai

எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.

Parimezhalagar_Urai

எளிது என இல் இறப்பான் - 'எய்துதல் எளிது' என்று கருதிப் பின்விளைவு கருதாது பிறன் இல்லின்கண் இறப்பான், விளியாது எஞ்ஞான்றும் நிற்கும் பழி எய்தும் - மாய்தல் இன்றி எஞ்ஞான்றும் நிலைநிற்கும் குடிப்பழியினை எய்தும். (இல்லின்கண் இறத்தல் - இல்லாள்கண் நெறிகடந்து சேறல்.)

M_Varadharajanar Urai

இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்

Solomon_Pappaiya Urai

அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.