Kural 14 details
அறத்துப்பால் • பாயிரவியல் • வான்சிறப்பு
Virtue • பாயிரவியல் • வான்சிறப்பு
Verse
வாரி வளங்குன்றிக் கால்.
பொருள் (Tamil)
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்
Explanation (English)
If clouds their wealth of waters fail on earth to pour, The ploughers plough with oxen's sturdy team no more
Athigaram
வான் சிறப்பு
Section / Chapter
Section: 2.4
Chapter: அறத்துப்பால்
Kalaingar_Urai
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றிவிடும்.
Parimezhalagar_Urai
உழவர் ஏரின் உழார்- உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின். ('குன்றியக்கால்' என்பது குறைந்து நின்றது. உணவு இன்மைக்குக் காரணம் கூறியவாறு.)
M_Varadharajanar Urai
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்
Solomon_Pappaiya Urai
மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்