Kural 1300 details

காமத்துப்பால்கற்பியல்நெஞ்சொடுபுலத்தல்

Loveகற்பியல்நெஞ்சொடுபுலத்தல்

Back to search

Verse

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.
Thanjam Thamarallar Edhilaar Thaamutaiya Nenjam Thamaral Vazhi

பொருள் (Tamil)

நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்

Explanation (English)

A trifle is unfriendliness by aliens shown, When our own heart itself is not our own

Athigaram

நெஞ்சொடு புலத்தல்

Section / Chapter

Section: 130.10

Chapter: காமத்துப்பால்

Kalaingar_Urai

நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.

Parimezhalagar_Urai

(இதுவும் அது.) தாம் உடைய நெஞ்சம் தமர் அல்வழி - தாம் உரித்தாக உடைய நெஞ்சம் ஒருவர்க்குத் தமர் அல்லாவழி; ஏதிலார் தமர் அல்லர் தஞ்சம் - அயலார் தமர் அல்லராதல் சொல்ல வேண்டுமோ? ('பிறளொருத்தியைக் காதலி என்று கருதி என் நெஞ்சே என்னை வருத்தாநின்ற பின் அப்பிறள் புலக்கின்றது எளிது', என்பதாம்.)

M_Varadharajanar Urai

ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.

Solomon_Pappaiya Urai

நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.