Kural 1300 details
காமத்துப்பால் • கற்பியல் • நெஞ்சொடுபுலத்தல்
Love • கற்பியல் • நெஞ்சொடுபுலத்தல்
Verse
நெஞ்சம் தமரல் வழி.
பொருள் (Tamil)
நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்
Explanation (English)
A trifle is unfriendliness by aliens shown, When our own heart itself is not our own
Athigaram
நெஞ்சொடு புலத்தல்
Section / Chapter
Section: 130.10
Chapter: காமத்துப்பால்
Kalaingar_Urai
நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.
Parimezhalagar_Urai
(இதுவும் அது.) தாம் உடைய நெஞ்சம் தமர் அல்வழி - தாம் உரித்தாக உடைய நெஞ்சம் ஒருவர்க்குத் தமர் அல்லாவழி; ஏதிலார் தமர் அல்லர் தஞ்சம் - அயலார் தமர் அல்லராதல் சொல்ல வேண்டுமோ? ('பிறளொருத்தியைக் காதலி என்று கருதி என் நெஞ்சே என்னை வருத்தாநின்ற பின் அப்பிறள் புலக்கின்றது எளிது', என்பதாம்.)
M_Varadharajanar Urai
ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.
Solomon_Pappaiya Urai
நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.