Kural 1296 details
காமத்துப்பால் • கற்பியல் • நெஞ்சொடுபுலத்தல்
Love • கற்பியல் • நெஞ்சொடுபுலத்தல்
Verse
தினிய இருந்ததென் நெஞ்சு.
பொருள் (Tamil)
காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது
Explanation (English)
My heart consumes me when I ponder lone, And all my lover's cruelty bemoan
Athigaram
நெஞ்சொடு புலத்தல்
Section / Chapter
Section: 130.6
Chapter: காமத்துப்பால்
Kalaingar_Urai
காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்த போது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.
Parimezhalagar_Urai
(இதுவும் அது.) என் நெஞ்சு இருந்தது - என் நெஞ்சு ஈண்டு இருந்தது; தனியே இருந்து நினைத்தக்கால் - காதலரைப் பிரிந்திருந்து அவர் கொடுமைகளை யான் தன்னொடு நினைத்தக்கால்; என்னைத் தினிய - அவ் அளவறிந்து என்னைத்தின்பது போன்று துன்பம் செய்தற்கே. ('என்மாட்டிருந்தது அன்று அவர் கொடுமைகளை உட்கொண்டு எனக்கு ஆற்றாமை செய்தற்கே, இன்று அவை நோக்கி அவரொடு புலத்தற்கன்று' என்பதாம்.)
M_Varadharajanar Urai
காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.
Solomon_Pappaiya Urai
காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.