Kural 1286 details

காமத்துப்பால்கற்பியல்புணர்ச்சிவிதும்பல்

Loveகற்பியல்புணர்ச்சிவிதும்பல்

Back to search

Verse

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.
Kaanungaal Kaanen Thavaraaya Kaanaakkaal Kaanen Thavaral Lavai

பொருள் (Tamil)

அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை

Explanation (English)

When him I see, to all his faults I 'm blind; But when I see him not, nothing but faults I find

Athigaram

புணர்ச்சி விதும்பல்

Section / Chapter

Section: 129.6

Chapter: காமத்துப்பால்

Kalaingar_Urai

அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை.

Parimezhalagar_Urai

(இதுவும் அது.) காணுங்கால் தவறாய காணேன் - கொண்கனை யான் காணும் பொழுது அவன் தவறாயவற்றைக் காண்கின்றிலேன்; காணாக்கால் தவறல்லவை காணேன் - காணாத பொழுது அவையேயல்லாது பிறவற்றைக் காண்கின்றிலேன். (செயப்படுபொருள் அதிகாரத்தான் வந்தது. 'முன்பு நான் நின்னொடு சொல்லிய தவறுகள் இதுபொழுது காணாமையின் புலந்திலேன்', என்பதாம்.)

M_Varadharajanar Urai

காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.

Solomon_Pappaiya Urai

கணவனை நான் காணும்போது அவரது தவறுகளைக் காணேன்; காணாதபோதோ, தவறுகளைத் தவிரப் பிறவற்றைக் காணேன்.