Kural 1285 details

காமத்துப்பால்கற்பியல்புணர்ச்சிவிதும்பல்

Loveகற்பியல்புணர்ச்சிவிதும்பல்

Back to search

Verse

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.
Ezhudhungaal Kolkaanaak Kannepol Konkan Pazhikaanen Kanta Itaththu

பொருள் (Tamil)

கண்ணில் மை தீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும் கோலைக் காணாதது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன் என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன்

Explanation (English)

The eye sees not the rod that paints it; nor can I See any fault, when I behold my husband nigh

Athigaram

புணர்ச்சி விதும்பல்

Section / Chapter

Section: 129.5

Chapter: காமத்துப்பால்

Kalaingar_Urai

கண்ணில் மை தீட்டித் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும்,கோலைக் காணாதது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன் என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன்.

Parimezhalagar_Urai

(இதுவும் அது.) எழுதுங்கால் கோல் காணாக் கண்ணேபோல் - முன்னெல்லாங் கண்டிருந்தும் எழுதுங்காலத்து அஞ்சனக் கோலின் இயல்பு காணமாட்டாத கண்ணேபோல; கொண்கன் பழி கண்டவிடத்துக் காணேன் - கொண்கனது தவறு காணாதவிடத் தெல்லாம் கண்டிருந்து. அவனைக் கண்டவிடத்துக் காணமாட்டேன். (கோல்: ஆகுபெயர். இயல்பு: கருமை. 'என் இயல்பு இதுவாகலின் மேலும் அது தப்ப முடியாது' என்பதாம்.)

M_Varadharajanar Urai

மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.

Solomon_Pappaiya Urai

முன்பு பார்த்திருந்தும் மை தீட்டும்போது அஞ்சனக் கோலைக் காணாத கண்களைப் போல, கணவனின் தவற்றை அவர் இல்லாதபோது எண்ணி இருந்தும், நேரில் அவரைக் கண்ட போது காணேன்.