Kural 1265 details
காமத்துப்பால் • கற்பியல் • அவர்வயின்விதும்பல்
Love • கற்பியல் • அவர்வயின்விதும்பல்
Verse
நீங்கும்என் மென்தோள் பசப்பு.
பொருள் (Tamil)
கண்ணார என் கணவனைக் காண்பேனாக் கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்
Explanation (English)
O let me see my spouse again and sate these longing eyes! That instant from my wasted frame all pallor flies
Athigaram
அவர்வயின் விதும்பல்
Section / Chapter
Section: 127.5
Chapter: காமத்துப்பால்
Kalaingar_Urai
கண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்.
Parimezhalagar_Urai
(தலைமகன் வரவு கூற ஆற்றாயாய்ப் பசக்கற்பாலையல்லை என்ற தோழிக்குச சொல்லியது.) கண் ஆரக் கொண்கனைக் காண்க - என் கண்கள் ஆரும் வகை என் கொண்கனை யான் காண்பேனாக; கண்ட பின் என் மென்தோள் பசப்பு நீங்கும் - அங்ஙனம் கண்டபின் என் மெல்லிய தோள்களின்கண் பசப்புத் தானே நீங்கும்.('காண்க' என்பது ஈண்டு வேண்டிக் கோடற்பொருட்டு. அதுவேண்டும் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண்வந்தது. 'கேட்ட துணையான் நீங்காது' என்பதாம்.)
M_Varadharajanar Urai
என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.
Solomon_Pappaiya Urai
என் கண்கள் முழுக்க என் கணவரை நான் காண்பேனாகுக; அவரைக் கண்டபின் என் மெல்லிய தோளின் வாடிய நிறம் தானாக நீங்கும்.