Kural 1249 details
காமத்துப்பால் • கற்பியல் • நெஞ்சொடுகிளத்தல்
Love • கற்பியல் • நெஞ்சொடுகிளத்தல்
Verse
யாருழைச் சேறியென் நெஞ்சு.
பொருள் (Tamil)
உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?
Explanation (English)
My heart! my lover lives within my mind; Roaming, whom dost thou think to find
Athigaram
நெஞ்சொடு கிளத்தல்
Section / Chapter
Section: 125.9
Chapter: காமத்துப்பால்
Kalaingar_Urai
உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?
Parimezhalagar_Urai
(இதுவும் அது.) என் நெஞ்சு - என் நெஞ்சே; காதலவர் உள்ளத்தாராக - காதலர் நின்னகத்தாராக; நீ உள்ளி யாருழைச் சேறி - முன்பெல்லாம் கண்டு வைத்து இப்பொழுது நீ புறத்துத் தேடிச் செல்கின்றது யாரிடத்து? ('உள்ளம்' என்புழி 'அம்' பகுதிப் பொருள் விகுதி. 'நின்னகத்திருக்கின்றவரை அஃது அறியாது புறத்துத் தேடிச் சேறல் நகை உடைத்து, அதனை ஒழி' என்பதாம்.)
M_Varadharajanar Urai
என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?
Solomon_Pappaiya Urai
என் நெஞ்சே! நம் அன்பர் நம் மனத்திற்குள்ளேயே இருக்க, நீ அவரைத் தேடி எவரிடம் போகிறாய்?