Kural 1232 details

காமத்துப்பால்கற்பியல்உறுப்புநலனழிதல்

Loveகற்பியல்உறுப்புநலனழிதல்

Back to search

Verse

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.
Nayandhavar Nalkaamai Solluva Polum Pasandhu Panivaarum Kan

பொருள் (Tamil)

பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதை சொல்லி காட்டுகின்றன

Explanation (English)

The eye, with sorrow wan, all wet with dew of tears, As witness of the lover's lack of love appears

Athigaram

உறுப்பு நலன் அழிதல்

Section / Chapter

Section: 124.2

Chapter: காமத்துப்பால்

Kalaingar_Urai

பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதைச் சொல்லிக் காட்டுகின்றன.

Parimezhalagar_Urai

பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதைச் சொல்லிக் காட்டுகின்றன.

M_Varadharajanar Urai

பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.

Solomon_Pappaiya Urai

பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்!