Kural 1213 details

காமத்துப்பால்கற்பியல்கனவுநிலையுரைத்தல்

Loveகற்பியல்கனவுநிலையுரைத்தல்

Back to search

Verse

நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.
Nanavinaal Nalkaa Thavaraik Kanavinaal Kaantalin Unten Uyir

பொருள் (Tamil)

நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது

Explanation (English)

Him, who in waking hour no kindness shows, In dreams I see; and so my lifetime goes

Athigaram

கனவுநிலை உரைத்தல்

Section / Chapter

Section: 122.3

Chapter: காமத்துப்பால்

Kalaingar_Urai

நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.

Parimezhalagar_Urai

(ஆற்றாள் எனக் கவன்றாட்கு ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது.) நனவினான் நல்காதவரை - நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை; கனவினாற் காண்டலின் என் உயிர் உண்டு - யான் கனவின்கண் கண்ட காட்சியானே என்னுயிர் உண்டாகா நின்றது. (மூன்றனுருபுகள் ஏழன் பொருண்மைக்கண் வந்தன. 'அக்காட்சியானே யான் ஆற்றியுளேன் ஆகின்றேன். நீ கவலல் வேண்டா', என்பதாம்.)

M_Varadharajanar Urai

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.

Solomon_Pappaiya Urai

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.