Kural 121 details

அறத்துப்பால்இல்லறவியல்அடக்கமுடைமை

Virtueஇல்லறவியல்அடக்கமுடைமை

Back to search

Verse

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
Atakkam Amararul Uykkum Atangaamai Aarirul Uyththu Vitum

பொருள் (Tamil)

அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும் அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்

Explanation (English)

Control of self does man conduct to bliss th' immortals share; Indulgence leads to deepest night, and leaves him there

Athigaram

அடக்கம் உடைமை

Section / Chapter

Section: 13.1

Chapter: அறத்துப்பால்

Kalaingar_Urai

அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.

Parimezhalagar_Urai

அடக்கம் அமரருள் உய்க்கும் - ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவருலகத்து உய்க்கும் ; அடங்காமை ஆர்இருள் உய்த்துவிடும் - அடங்காமையாகிய பாவம் தங்குதற்கு அரிய இருளின்கண் செலுத்தும். ( 'இருள்' என்பது ஓர் நரக விசேடம். "எல்லாம் பொருளில் பிறந்துவிடும்" (நான்மணி.7) என்றாற்போல, 'உய்த்துவிடும்' என்பது ஒரு சொல்லாய் நின்றது.)

M_Varadharajanar Urai

அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.

Solomon_Pappaiya Urai

அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.