Kural 121 details
அறத்துப்பால் • இல்லறவியல் • அடக்கமுடைமை
Virtue • இல்லறவியல் • அடக்கமுடைமை
Verse
ஆரிருள் உய்த்து விடும்.
பொருள் (Tamil)
அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும் அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்
Explanation (English)
Control of self does man conduct to bliss th' immortals share; Indulgence leads to deepest night, and leaves him there
Athigaram
அடக்கம் உடைமை
Section / Chapter
Section: 13.1
Chapter: அறத்துப்பால்
Kalaingar_Urai
அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.
Parimezhalagar_Urai
அடக்கம் அமரருள் உய்க்கும் - ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவருலகத்து உய்க்கும் ; அடங்காமை ஆர்இருள் உய்த்துவிடும் - அடங்காமையாகிய பாவம் தங்குதற்கு அரிய இருளின்கண் செலுத்தும். ( 'இருள்' என்பது ஓர் நரக விசேடம். "எல்லாம் பொருளில் பிறந்துவிடும்" (நான்மணி.7) என்றாற்போல, 'உய்த்துவிடும்' என்பது ஒரு சொல்லாய் நின்றது.)
M_Varadharajanar Urai
அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.
Solomon_Pappaiya Urai
அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.