Kural 108 details

அறத்துப்பால்இல்லறவியல்செய்ந்நன்றி அறிதல்

Virtueஇல்லறவியல்செய்ந்நன்றி அறிதல்

Back to search

Verse

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
Nandri Marappadhu Nandrandru Nandralladhu Andre Marappadhu Nandru

பொருள் (Tamil)

ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல் அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது

Explanation (English)

'Tis never good to let the thought of good things done thee pass away; Of things not good, 'tis good to rid thy memory that very day

Athigaram

செய்ந்நன்றி அறிதல்

Section / Chapter

Section: 11.8

Chapter: அறத்துப்பால்

Kalaingar_Urai

ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.

Parimezhalagar_Urai

நன்றி மறப்பது நன்று அன்று -ஒருவன் முன் செய்த நன்மையை மறப்பது ஒருவற்கு அறன் அன்று; நன்று அல்லது அன்றே மறப்பது நன்று - அவன் செய்த தீமையைச் செய்த பொழுதே மறப்பது அறன். (இரண்டும் ஒருவனாற் செய்யப்பட்ட வழி, மறப்பதும் மறவாததும் வகுத்துக் கூறியவாறு.)

M_Varadharajanar Urai

ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம்.

Solomon_Pappaiya Urai

ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்