Kural 1078 details
பொருட்பால் • குடியியல் • கயமை
Wealth • குடியியல் • கயமை
Verse
கொல்லப் பயன்படும் கீழ்.
பொருள் (Tamil)
குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்
Explanation (English)
The good to those will profit yield fair words who use; The base, like sugar-cane, will profit those who bruise
Athigaram
கயமை
Section / Chapter
Section: 108.8
Chapter: பொருட்பால்
Kalaingar_Urai
குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரிய பயனைப் பெறமுடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல்,போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்.
Parimezhalagar_Urai
சொல்லப் பயன்படுவர் சான்றோர் -மெலியர் சென்று தம் குறையைச் சொல்லிய துணையானே இரங்கிப் பயன்படுவர் மேலாயினார்; கீழ் கரும்புபோல் கொல்லப் பயன்படும் - மறைக் கீழயினார் கரும்பு போல வலியார் நைய நெருக்கிய வழிப் பயன்படுவர். (பயன்படுதல்: உள்ளது கொடுத்தல். கீழாயினாரது இழிவு தோன்ற, மேலாயினாரையும் உடன் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் கொடுக்குமாறு கூறப்பட்டது.)
M_Varadharajanar Urai
அணுகி குறைச் சொல்லுகின்ற அளவிலேயே சான்றோர் பயன்படுவர், கரும்புபோல் அழித்துப் பிழிந்தால் தான் கீழ்மக்கள் பயன்படுவர்.
Solomon_Pappaiya Urai
இல்லாதவர் சென்று தம் நிலையைச் சொன்ன அளவில், சான்றோர் இரங்கிக் கொடுப்பர்; கயவர்களோ கரும்பைப் பிழிவதுபோல் பிழிந்தால்தான் கொடுப்பர்.