Kural 1073 details

பொருட்பால்குடியியல்கயமை

Wealthகுடியியல்கயமை

Back to search

Verse

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.
Thevar Anaiyar Kayavar Avarundhaam Mevana Seydhozhuka Laan

பொருள் (Tamil)

புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்

Explanation (English)

The base are as the Gods; they too Do ever what they list to do

Athigaram

கயமை

Section / Chapter

Section: 108.3

Chapter: பொருட்பால்

Kalaingar_Urai

புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால்,இருவரையும் சமமாகக் கருதலாம்.

Parimezhalagar_Urai

தேவர் அனையர் கயவர் - தேவரும் கயவரும் ஒரு தன்மையர்; அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான் - அஃது யாதினான் எனின், தேவரைப் போன்று தம்மை நியமிப்பாரின்றிக் கயவரும் தாம் விரும்புவனவற்றைச் செய்தொழுகலான். (உணர்ச்சியும் இழிவுமாகிய தம் காரண வேறுபாடு குறிப்பால் தோன்ற நின்றமையின், இது புகழ்வார் போன்று பழித்தவாறாயிற்று. இதனான், விலக்கற்பாடின்றி வேண்டிய செய்வர் என்பது கூறப்பட்டது.)

M_Varadharajanar Urai

கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.

Solomon_Pappaiya Urai

தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்து வாழ்வதால், கயவர் தேவரைப் போன்றவராவர்.