Kural 106 details
அறத்துப்பால் • இல்லறவியல் • செய்ந்நன்றி அறிதல்
Virtue • இல்லறவியல் • செய்ந்நன்றி அறிதல்
Verse
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
பொருள் (Tamil)
மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது
Explanation (English)
Kindness of men of stainless soul remember evermore Forsake thou never friends who were thy stay in sorrow sore
Athigaram
செய்ந்நன்றி அறிதல்
Section / Chapter
Section: 11.6
Chapter: அறத்துப்பால்
Kalaingar_Urai
மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.
Parimezhalagar_Urai
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு துறவற்க - துன்பக் காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை விடாதொழிக;மாசு அற்றார் கேண்மை மறவற்க - அறிவொழுக்கங்களில் குற்றமற்றாரது கேண்மையை மறவா தொழிக. (கேண்மை: கேள் ஆம் தன்மை. இம்மைக்கு உறுதி கூறுவார், மறுமைக்கு உறுதியும் உடன் கூறினார்.)
M_Varadharajanar Urai
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது .
Solomon_Pappaiya Urai
உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.