Kural 1048 details

பொருட்பால்குடியியல்நல்குரவு

Wealthகுடியியல்நல்குரவு

Back to search

Verse

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.
Indrum Varuvadhu Kollo Nerunalum Kondradhu Polum Nirappu

பொருள் (Tamil)

கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்

Explanation (English)

And will it come today as yesterday, The grief of want that eats my soul away

Athigaram

நல்குரவு

Section / Chapter

Section: 105.8

Chapter: பொருட்பால்

Kalaingar_Urai

கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப் படுத்திய வறுமை,தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்.

Parimezhalagar_Urai

நெருதலும் கொன்றது போலும் நிரப்பு - நெருநற்றும் கொன்றது போன்று எனக்கு இன்னாதவற்றைச் செய்த நல்குரவு; இன்றும் வருவது கொல்லோ - இன்றும் என்பால் வரக்கடவதோ, வந்தால் இனி யாது செய்வேன்?(அவ்வின்னாதனவாவன, மேற்சொல்லிய (குறள்.1045)துன்பங்கள், நெருநல் மிக வருந்தித் தன் வயிறு நிறைத்தான் ஒருவன் கூற்று.)

M_Varadharajanar Urai

நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).

Solomon_Pappaiya Urai

நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?