Kural 1041 details
பொருட்பால் • குடியியல் • நல்குரவு
Wealth • குடியியல் • நல்குரவு
Verse
இன்மையே இன்னா தது.
பொருள் (Tamil)
வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை
Explanation (English)
You ask what sharper pain than poverty is known; Nothing pains more than poverty, save poverty alone
Athigaram
நல்குரவு
Section / Chapter
Section: 105.1
Chapter: பொருட்பால்
Kalaingar_Urai
வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.
Parimezhalagar_Urai
இன்மையின் இன்னாதது யாது எனின் - ஒருவனுக்கு வறுமை போல இன்னாதது யாது என்று வினவின்; இன்மையின் இன்னாதது இன்மையே - வறுமை போல இன்னாதது வறுமையே, பிறிதில்லை. (இன்னாதது - துன்பஞ்செய்வது. ஒப்பது இல்லை எனவே, மிக்கது இன்மை சொல்ல வேண்டாவாயிற்று)
M_Varadharajanar Urai
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.
Solomon_Pappaiya Urai
இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே.