Kural 1041 details

பொருட்பால்குடியியல்நல்குரவு

Wealthகுடியியல்நல்குரவு

Back to search

Verse

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.
Inmaiyin Innaadhadhu Yaadhenin Inmaiyin Inmaiye Innaa Thadhu

பொருள் (Tamil)

வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை

Explanation (English)

You ask what sharper pain than poverty is known; Nothing pains more than poverty, save poverty alone

Athigaram

நல்குரவு

Section / Chapter

Section: 105.1

Chapter: பொருட்பால்

Kalaingar_Urai

வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.

Parimezhalagar_Urai

இன்மையின் இன்னாதது யாது எனின் - ஒருவனுக்கு வறுமை போல இன்னாதது யாது என்று வினவின்; இன்மையின் இன்னாதது இன்மையே - வறுமை போல இன்னாதது வறுமையே, பிறிதில்லை. (இன்னாதது - துன்பஞ்செய்வது. ஒப்பது இல்லை எனவே, மிக்கது இன்மை சொல்ல வேண்டாவாயிற்று)

M_Varadharajanar Urai

வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.

Solomon_Pappaiya Urai

இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே.