Kural 102 details
அறத்துப்பால் • இல்லறவியல் • செய்ந்நன்றி அறிதல்
Virtue • இல்லறவியல் • செய்ந்நன்றி அறிதல்
Verse
ஞாலத்தின் மாணப் பெரிது.
பொருள் (Tamil)
தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்
Explanation (English)
A timely benefit, -though thing of little worth, The gift itself, -in excellence transcends the earth
Athigaram
செய்ந்நன்றி அறிதல்
Section / Chapter
Section: 11.2
Chapter: அறத்துப்பால்
Kalaingar_Urai
தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும்,அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.
Parimezhalagar_Urai
காலத்தினால் செய்த நன்றி - ஒருவனுக்கு இறுதிவந்த எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம்; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப்பெரிது - தன்னை நோக்கச் சிறிதாயிருந்தது ஆயினும் அக்காலத்தை நோக்க நிலவுலகத்தினும் மிகப் பெரியது. (அக்காலம் நோக்குவதல்லது பொருள் நோக்கலாகாது என்பதாம். 'காலத்தினால்' என்பது வேற்றுமை மயக்கம்.)
M_Varadharajanar Urai
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.
Solomon_Pappaiya Urai
நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்